வைகாசிபட்டி கிராம ஸ்ரீ கல்லுமலை கந்தன் விநாயகர் இராமலிங்கம் சுவாமி கோவில் சித்திரை திருவிழா
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வைகாசிபட்டி கிராம பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன் ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ இராமலிங்க சுவாமி கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிகளுக்கு பல்வேறு மலர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
இரண்டு நாட்கள் நடைபெற்ற விழாவில் நேர்த்திக்கடன் செலுத்து வண்ணமாக பக்தர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு, நெல், உள்ளிட்ட தானிய வகைகளும் சேவல், கோழி, ஆகியவை காணிக்கையாக செலுத்தினார். திருவிழாவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மற்றும் மதுரை தேனி திண்டுக்கல் திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.