அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆலோசனை கூட்டம் அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் அமைப்பின் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது முனைவர் செயலாளர் கதிர் கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்
துணை தலைவர் புலவர் இளங்கோ கருத்துரை மேற்கொண்டு பேசினார் அமைப்பு செயலாளர் அரியலூர் நல்லப்பன் விளக்க உரையாற்றினார் நிதி நிலை குறித்து விளக்கி கொவி புகழேந்தி செய்தி தொடர்பாளர் தமிழ் களம் இளவரசன் ஆகியோர் பேசினார்கள் பேரமைப்பின் ஆண்டு விழாவை இந்த மாதத்தில் சிறப்பாக கொண்டாடுவது மேலும் மாவட்டத்தில் மாநில அளவில் அகில இந்திய அளவில் சாதனைகள் புரிந்தவர்களை அழைத்து கௌரவப்படுத்தி பாராட்டி அவர்களுக்கு சால்வைகள் வழங்கி கௌரவப்படுத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது