மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் கிராமப்புறங்களில் மேம்பாடு ட்ரஸ்ட் மற்றும் திராவிட அரசியல் மாத இதழ் மக்கள் நல பேரவை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமை நகராட்சி சேர்மன் முகமது யாசின் முன்னிலை பாண்டியராஜன் வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கும் கண் பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழிலேன்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை வழங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்