.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது, விழாவிற்கு கோவல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாவலர் சிங்கார உதியன் தலைமை தாங்கினார். பயிற்சி பள்ளியின் நிர்வாகி எஸ்.சரவணன் வரவேற்றார்.

சாகித்யா விருது பெற்ற எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ, நகரமன்ற உறுப்பினர்கள் ஐ.ஆர்.கோவிந்தராஜ், கந்தன்பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நகர்மன்ற தலைவர் டி.என்.முருகன் அந்தமானில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பதக்கம், கோப்பை வழங்கப் பாராட்டிப் பேசினார்.

உடற்பயிற்சி ஆசிரியர் மலர்க்கொடி, சமூக சேவகர் எம்.கார்த்தி, விக்னேஷ் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.பயிற்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *