தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணியில், தமிழக அரசின் தென்காசி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை பங்கேற்று, முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிறந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கினார்.
இம்முகாமில் கால்நடை மருத்துவர்கள் கிருஷ்ணமணி, பாலமுருகன், கால்நடை ஆய்வாளர் டெய்சிசகாயராணி ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டனர். வார்டு உறுப்பினர் ரமீலா நன்றி கூறினார்.