மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்பளை வரவில்லை இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர் இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
சுமார் 30க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து வந்த மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெய பாண்டியன் ஏட்டு முருகேசன் தினேஷ் ஆகியூர் பேச்சுவார்த்தை நடத்தினர் அந்தப் பகுதி கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினையை நடவடிக்கை எடுப்பதாக கூறினார் இதனை அடுத்து அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.