E.ஸ்ரீனிவாசன் செய்தியாளர்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலிய சுவாமிகள் திருக்கோவிலில் தை கிருத்திகை தினத்தை முன்னிட்டு மலைப்பாதையை உற்சவர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளித் தேரில் வலம் வந்தார்
தை கிருத்திகை திருநாளை முன்னிட்டு மாலை 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த மூலவருக்கு பால் தேன் இளநீர்,திருநீர் ஆகிய மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து பொம்ம புர ஆதினத்தின் 20 ஆம் பட்டம் சுவாமிகள் தலைமையில் வண்ண மலர்களால் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாலை ஏழு முப்பது மணி அளவில் வெள்ளித் தேரில் அமர வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் மற்றும் வானவேடிக்கையோடு மலை பாதையை வலம் வந்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை புதுச்சேரி விழுப்புரம் ,திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.