கோவை
ரோட்டரி கிளப் கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் சார்பாக சமூகத்தில் நலிந்த மற்றும் ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு என கல்வி ,மருத்துவ உதவி,அரசு பள்ளிகளுக்கு தேவையான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் இது போன்ற சமூகம் சார்ந்த சேவை திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் கார்னிவல் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.அதன்படி தொடர்ந்து பதினெட்டாவது ஆண்டாக கிரிக்கெட் தொடர் போட்டி பூசாரிபாளையம் டயமண்ட் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது.பெண்களுக்கென பிரத்யேக சக்ரா நினைவு கோப்பை மற்றும் ஆண்களுக்கான கரீப்தாஸ் ஜி நினைவு கோப்பை என இரு தினங்களாக போட்டிகள் நடைபெற்றது. ரோட்டரி கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் தலைவர், பத்ரிநாத் மற்றும் செயலாளர் லட்சுமண பிரசாத்,போட்டிகளுக்கான தலைவர் அசோகன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,ரோட்டரி மாவட்டத்திற்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கிளை அமைப்பினர் கலந்து கொண்டு விளையாடினர்.நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினர்களாக மூத்த வழக்கறிஞரும் மாவட்ட ஆளுநர் நாமினி சுந்தர வடிவேலு,ரோட்டரி ஆளுநர் ராஜசேகர்,துணை ஆளுநர் சஞ்சய் ஷா,திருமதி லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவித்தனர்..