காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கான வடகிழக்கு மாநிலங்களின் நிகழ்ச்சி பொறுப்பாளராக புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தேசத்தை ஒருங்கிணைப்போம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறாா். முதல் கட்டமாக கன்னியாகுமரியில் தொடங்கி புதுதில்லியில் முடித்துள்ளாா். அவா், இரண்டாம் கட்டமாக வடகிழக்கு மாநிலங்களில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

வடகிழக்கு மாநில நடைபயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளராக புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமியை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கே உத்தரவின் பேரில் பொதுச் செயலா் வேணுகோபால் இதனை தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *