கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூரில் 37வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா..

கரூர் மாநகரம் பஸ்நிலையம் மனோர ரவுண்டானம் அருகில் கோவை சாலையில்
கரூர் நகர போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் வாசகி கிளப் கே சி ஜி எஃப் வனிதா எலெக்ட் கரூர் இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரூர் மாநகர போக்குவரத்து ஆய்வாளர் சசிரா பானு தலைமையிலும்
சிறப்பு அழைப்பாளராக ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் வெங்கடாசலம்
கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி கவசம் அணிய வேண்டும்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் சேதங்களை குறித்து சாலை பாதுகாப்பு மேம்படுத்த தமிழகத்தில் உருவாக்கிட வேண்டும்.
இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம்,நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பதால் விபத்து நேரிட தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் இயக்க வேண்டாம்,,செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட வேண்டாம்,, குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம், அதிவேகமாக வாகன ஓட்ட வேண்டாம் என பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்கள்

உடன் உதவி ஆய்வாளர் போக்குவரத்து .விஸ்வநாதன், அர்ஜுனன் மற்றும் போக்குவரத்து போலீஸ்,காவல் துறையினர், தனியார் தொண்டு அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *