முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது இப்பேரணி காந்தி சிலையில் துவங்கி முதுகுளத்தூர் முக்கிய வீதிகளில் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பேச்சுப்போட்டி நடைபெற்று
அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இப்பேரணியைமுதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ராஜா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்,வட்டாட்சியர் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர் கோகுல்நாத் ,துணை வட்டாட்சியர் தேர்தல் தமிழ் மதி, வருவாய் ஆய்வாளர் தினேஷ், முதல் நிலை வருவாய் ஆய்வாளர் தேர்தல் பெரியசாமி, காவல்துறை ஆய்வாளர் ஜெகதீஷ் , காவல்துறை உதவி ஆய்வாளர் முகில் அரசன், கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், ஜெயமுருகன், மற்றும் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்