எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலெரிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது தமிழகம் முழுவதும் இருந்து 110 நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர் முகாமில் சீர்காழி மயிலாடுதுறை கொள்ளிடம் பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முகாமிலேயே உடனடியாக பணியாளை வழங்கப்பட்டது
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் பழனி தலைமையில் விவேகானந்தா பள்ளியில் நடைபெற்ற முகாமை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நேர்காணலில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்
.இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல் மற்றும் சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி,விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.