நெருப்பில் பூத்த ஆசிரியர் !
நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இதயம் பதிப்பகம், பூண்டி, அன்னை இல்லம், 118-ஆ, பெத்தானியாபுரம்
மேட்டுத் தெரு, மதுரை – 625 016. அலைபேசி : 97881 70982 விலை : ரூ. 250
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தி.  மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் ஆலோசகர் விஞ்ஞானி இனிய நண்பர் திரு.V. பொன்ராஜ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக விளங்குகின்றது. 

   நூலாசிரியர் உழைப்பால் உயர்ந்தவர் கலைமாமணி எப். சூசை மாணிக்கம் அவர்கள் தன் வரலாற்றை சுவைபட, நான் என்று எழுதாமல் சாமிக்கண்ணு என்று புனைப்பெயர் சூட்டி சாமிக்கண்ணு வரலாறு போல தன் வரலாறு எழுதி உள்ளார்.  நல்ல நடை, அவர் எழுத, எழுத நாம் வாசிக்க, வாசிக்க அந்த எழுத்து வாசகர் மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றது.  ஒரு திரைப்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு வந்தது.

   பிறப்பு சம்பவமாக இருக்கலாம்.  ஆனால் வாழ்க்கை சரித்திரமாக வேண்டும் என்பார்கள்.  நூல் ஆசிரியர் கலைமாமணி எப். சூசை மாணிக்கம் என்ற சாதாரண மனிதன், சாதனை மனிதனாக, கலைமாமணியாக உயர்ந்த வரலாறு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *