திருவாரூர் மாவட்டம், ஆட்சியரக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த 50 பயனாளிகளுக்கு ரூ.69 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தலா 8 கிராம் தங்க நாணயங்களினை மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன்,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் வழங்கினார்கள்
தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித்திட்டம் டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.69 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தலா 8 கிராம் தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் வழங்கினார்கள்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.