புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை , மின்துறை மற்றும் புதுச்சேரி நகராட்சி மூலம் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
உருளையன்பேட்டை தொகுதியில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு(எ)குப்புசாமி எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணி துறை மூலம் நடைபெற வேண்டிய வாய்க்கால் புதுப்பிக்கும் பணிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் புதிய சாலைகளாக அமைத்தல் புதிய தண்ணீர் குழாய்கள் அமைத்தல் மற்றும் மின்துறை மூலம் புதிய மின் மாற்றிகள் அமைத்தல் புதிய புதைவிட மின் கேபிள்கள் அமைக்கும் பணிகள் குறித்தும் சிதிலமடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைப்பது பற்றியும், புதுச்சேரி நகராட்சி மூலம் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய முக்கிய பணிகள் பற்றியும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இதில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், முருகானந்தம், மின்துறை செயற்பொறியாளர் கனியமுது, நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், மற்றும் உதவி பொறியாளர்களான சம்மந்தம்,வாசு, கண்ணன், வைத்தியநாதன், நமச்சிவாயம் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.