புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அஷ்டபைரவர் ஆலய ஸ்ரீ சொர்ணா ஹர்ஷன பைரவர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமி பூஜைபைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர் என்று பொருள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்த நாளாகும். அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்க வழங்கப்படுவதால் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபட்டால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கி வறுமை மற்றும் பகைவர்களின் தொல்லையும் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று தன லாபமும் வியாபாரம் முன்னேற்றமும் பெறலாம் என்பது ஐதீகம்.
அந்த வகையில் அரியாங்குப்பம் கொம்யூன் தவளக்குப்பம் அண்ணா நகரில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு அஷ்டபைரவர் ஆலய ஸ்ரீ சொர்ணா ஹர்ஷன பைரவர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு யாகம் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.
முன்னதாக மங்கல இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, மகா பூர்ணாஹுதி ,கலச ஸ்தாபனம் இவைகளைத் தொடர்ந்து பைரவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், விபூதி மற்றும் கலச பூஜை செய்த நீரை ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்து கலச அபிஷேகம் செய்து எஜமான சங்கல்பம் செய்து 108 மலர் அர்ச்சனையுடன் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சிவபுராணம், அபிராமி அந்தாதி ஆகியவற்றிலிருந்து சில பாடல்களை பாமாலையாக சூடி பைரவருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரின் அருளைப் பெற்றனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர் கிருஷ்ணராஜ் கவிதா குடும்பத்தினர் மற்றும் அறங்காவல் குழு தலைவர் ராயல் ஆலய நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர் பாஸ்கர் பொதுமக்கள் இளைஞர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *