புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், முதியோர்,விதவை , மற்றும் முதிர்கன்னிகள் ஆகியோருக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் தொகுதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில்,புதுச்சேரி உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி உப்பளம் பகுதிகளைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு மாதந் தோறும் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் துணை இயக்குனர் அமுதா உடனிருந்தார்.மேலும் அவை தலைவர் ரவி, தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேலு, கலை மற்றும் இலக்கிய பகுதறிவு சந்திரன், இளைஞர் அணி ராஜி, மீனவர் அணி விநாயகமூர்த்தி, திமுக பிரமுகர் அஷ்ரப், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *