தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள ஜெ. பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அங்காடித் திருவிழாவணிகவியல் துறை சார்பில் நடைப்பெற்றது
ஜெ. பீ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாகி அருட்சகோதரி பி. ஹேம்லெட் மற்றும் முதல்வர் .முனைவர் ஜ. மைக்கேல் மரியதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்வணிகவியல் துறைத் தலைவர்களான எஸ் கனக லட்சுமி, A.மாரியம்மாள்,
எஸ். சீதா, என்.சந்தனமாரியப்பன், முனைவர் கே.அண்ணாமலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பழனி நாடார், சுரண்டை நகராட்சி மன்ற தலைவர்எஸ். வள்ளி முருகன், திருநெல்வேலி .மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செயல் நிறுவன மையத்தின் இயக்குநர் முனைவர்.ஜி.மகேஷ் குத்தாலம், தொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். சுவைதரன், குற்றாலம் கோல்டன் டாக்சி நிறுவனர். என்.ஆனந்த். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்இந்த நிகழ்வில் அனைத்து விதமான விற்பனைப் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.பேராசிரியர். எஸ் மகாராஜா மற்றும் பேராசிரியர் எம். ரஹ்மத் நிஷா ஆகியோரால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டது.
மகிழ்வுக்கும் திறமைக்கும் ஊக்கம் தந்த இந்த நிகழ்வு மாணவர்களின் வணிகவியல் துறை சார் திறமையை வெளிக் கொண்டு வருவதாக அமைந்தது.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக நெகிழி இல்லாத தென்காசி மாவட்டம் என்ற திட்டத்தை முன்னெடுக்கும் விதமாக மஞ்சள் பையை அறிமுகம் செய்து அதில் மரக் கன்றுகள் வைத்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.