கோவை ஆர் எஸ் புரம், ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளியில் மழலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கென பிரத்யேக வசதிகள் மேம்படுத்தபட்டு வருகின்றன.அந்த வகையில் குழந்தைகள் விளையாடி மகிழ பள்ளி வளாகத்தில் தனித்துவம் வாய்ந்த விளையாட்டுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மஹாவீர்ஸ் விளையாட்டுப் பூங்கா எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த பூங்கா திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இதில் பள்ளியின் முன்னாள் தலைவரான பாலசந்த் போத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பூங்காவை திறந்து வைத்தார். பூங்காவில் சிறுவர்,சிறுமிகள் பாதுகாப்புடன் விளையாடும் வகையில் ஊஞ்சல்,சறுக்கு விளையாட்டு போன்ற நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மஹாவீர்ஸ் பூங்கா துவக்க விழாவில், பள்ளித் தலைவர் .மஹாவீர் போத்ரா, பள்ளி முதல்வர் பங்கஜ், துணைத்தலைவர் கமலேஷ் பாஃப்னா, செயலர் நிஷாந்த் ஜெயின் துணைச்செயலர் ரதன் போத்ரா, பொருளாளர் அசோக் லூனியா, முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.புதிய பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *