எஸ் செல்வகுமார் செய்தியாளர்

சீர்காழி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திமுக அதிமுக தேமுதிக சுயேட்சை உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி சேர்மனாக திமுகவைச் சேர்ந்த துர்கா பரமேஸ்வரி பதவி வகித்து வருகிறார். கமிஷனராக வாசுதேவன் பணியாற்றி வருகிறார். நகர் பகுதியில் உள்ள 24 வார்டுகளில் குப்பைகள் அகற்றப்படவில்லை. குறிப்பாக குடிசை பகுதிகளில் முழுமையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. இதுகுறித்து கவுன்சிலர்கள் எடுத்துரைத்த போதும் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நகராட்சி கவுன்சில் சாதாரண கூட்டம் நடத்தப்பட்டது கூட்டத்திற்கு வந்த திமுக, அதிமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகள் என 12 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்தபடி நகரில் டெண்டர் விடப்பட்ட வேலைகள் செய்து முடிக்கப்படவில்லை. உறவினர்கள் மற்றும் திமுகவினருக்கு பணிகள் வழங்கப்பட்டதால் அவர்களை கண்டித்து வேலை வாங்க முடியவில்லை. அதிகாரிகள் தங்களது கடமைகளை சரிவர செய்யாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கின்றது. நகர் பகுதியில் குறிப்பாக குடிசை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் அல்லாமல் மலை போல் குவிந்து கிடப்பதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வலியுறுத்தியும் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேர்மன் மற்றும் கமிஷனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய முதல் கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கவுன்சிலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *