ம. சங்கரநாராயணன் செய்தியாளர்
.தூத்துக்குடி நகர மக்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து தனது சமுதாய வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள மீனவர்களின் தொழிலுக்கு அத்தியாவசிய தேவையான பின்னுவதற்காகவும் அதனை பழுதுபார்க்கவும் இருந்து வந்த வலை பின்னும் கூடம் முற்றிலும் சேதமடைந்து விட்டது.இந்த நிலையில் அந்த இடத்தில் புதிய வலை பின்னும் கூட அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற ஸ்டெர்லைட் நிறுவனம் தனது சமுதாய வளர்ச்சி திட்டத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக மீன் வலை பழுது பார்க்கும் கூடம் அமைத்துக் கொடுத்தது.இந்த மீன்வலை பழுது பார்க்கும் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இறால் மீன்பிடி தொழிலாளர் நலச்சங்க தலைவர் சந்தா பார்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் மீன் வலை பழுது பார்க்கும் கூடத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறது. தொடர்ந்து செய்ய தயாராக இருப்பதாக கூறினார்.நிகழ்ச்சியில் இறால் மீன்பிடி தொழிலாளர் நல சங்க தலைவர் சந்த பர்பார், செயலாளர் சம்சுதீன், பொருளாளர் யாசிர், தூத்துக்குடி மாவட்ட மீனவர் தொழிலாளர் நல சங்க தலைவர் நிக்கோலஸ், சிறுமால் நண்டு மீன்பிடி சங்க தலைவர் சந்தனராஜ், கணவாய் மீன்பிடி சங்க தலைவர் நம்புராஜ், இனிகோநகர் தென்பாகம் மீனவர் நல சங்க பொருளாளர் பாக்கியராஜ், சிந்தாதிரை மாதா தூண்டில் மீன் சங்க செயலாளர் எவுலின் விக்டோரியா, இனிகோ நகர் அந்தோணியார் மீனவர் நல சங்க தலைவர் எலிசபெதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் ஜேம்ஸ் டல்லஸ், ஜீடி பெர்னான்டோ, அஞ்சிதா, சங்கப் பிரதிநிதிகளுடன், ஏபிள் பவுண்டேஷன் என்ஜிஓவைச் சேர்ந்த சுபர்லா ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *