மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோடாங்கிபட்டி ஊராட்சியில் சுரேஷ் நினைவாக கபாடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை ஊராட்சி மன்ற தலைவர் கண்மணி திரவியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து கபாடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போட்டியை தொடங்கி வைக்க வருகை தந்த ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு கமிட்டியினர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.இந்த போட்டியில் சுற்று வட்டார கிராம மற்றும் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் கபாடி விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர், வெற்றி பெற்ற அணியினருக்கு சிறப்பு பரிசுகளும் கேடயம் ரொக்கபணம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.. விழா ஏற்பாடுகளை கோடாங்கிபட்டி கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.