தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் பொருளாதாரத்துறைத் தலைவராக பணிபுரிந்து வரும் டி.அமுதாவுக்கு சீனியர் பொருளாதார அறிஞர் விருது வழங்கப்பட்டது.
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 42வது தமிழ்நாடு பொருளாதார வல்லுனர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய உறுப்பினர் ஜோதி சிவஞானம், தூத்துக்குடி புனித மேரி கல்லூரி பொருளாதார துறைத் தலைவர் பேராசிரியர் டி.அமுதாவின் சாதனைகளைப் பாராட்டி சீனியர் பொருளாதார அறிஞர் விருது வழங்கி கௌரவித்தார்.மாநாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பொருளாதாரத் துறைத் தலைவர் அ.நாராயணமூர்த்தி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் கணேசன், சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரும், தமிழ்நாடு பொருளாதார வல்லுனர்கள் சங்கத் தலைவருமான பாதிரியார் ஏ.ஜி.லியோனார்டு, ஹைதராபாத் தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சக துணை இயக்குனர் சுப்புராஜ்,பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பி.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *