நூலகத்தில் கோடை கொண்டாட்டம் போட்டிகள்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் போட்டிகள் பரிசளிப்பு விழா மற்றும் மகளிர் தின விழா நடைபெற்றது.
தேவகோட்டை கிளை நூலகம் நூலகர் உடையப்பா அனைவரையும் வரவேற்றார் வாசகர் வட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் சிறப்புரையாற்றினார். கோடை கொண்டாட்டம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் தீபா, திவ்யஸ்ரீ ,ஜெயஸ்ரீ, அனுசியா, யோகேஸ்வரன்,முகல்யா ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது . மகளிர் தினம் தொடர்பாக ஆசிரியைகள் செல்வமீனாள், பாரதி ஆகியோர் பேசினார்கள் .நிகழ்வில் நூலக உறுப்பினர் நல்லாசிரியர் ராமசாமி, மீனா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவாக சுரேஷ் காந்தி நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் போட்டிகள் மற்றும் மகளிர் தின விழா நடைபெற்றது , நூலகர் உடையப்பா, வாசகர் வட்டத் தலைவர் ராஜமாணிக்கம், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் , ஆசிரியை செல்வமீனாள் உட்பட பலர் பேசினார்கள்.