தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் மலை அடிவாரத்தில் பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இயற்கையின் சூழலில் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது தான் கும்பக்கரை அருவி இந்த கும்பக்கரை அருவி வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது கும்பக்கரை அருவி பல ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களின் மிக முக்கியமான அருவியாக கருதப்படுகிறது.

இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருடம் தோறும் வருவது வழக்கம் கும்பக்கரை அருவிக்கு வருகிற சுற்றுலாப் பயணிகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்கிற மழை நீர் சிறு சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி பல்வேறு மூலிகைச் செடிகள் வேர்களின் நடுவே பாய்ந்து வந்து கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

இதனால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதனால் மூலிகை கலந்த நீரினால் உடல் புத்துணர்ச்சி அடைவதாக கருதுகின்றனர் மேலும் வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்த பொழுது மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழையால் திடீரென வெள்ளப்பருக்கு ஏற்பட்டது.

வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை அருவிப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு பலமுறை எச்சரித்தும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதில் ஆர்வம் காட்டி வந்ததால் திடீர் வெள்ளப்பெருக்கில் சுற்றுலாப் பயணிகள் அடித்துச் செல்லுகின்ற நிலை ஏற்பட்டது இருந்த போதும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித அபாயமும் இல்லாமல் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யும் போது எல்லாம் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் விதத்தில் தற்போது கும்பக்கரை அறிவிப்பகுதியில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு கடந்து செல்வதற்கும் அக்கறையில் இருந்து இக்கரை கடந்து வருவதற்கும் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் அக்கறையில் உள்ள சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக இந்த பாலம் மூலம் அழைத்து வர அமைக்கப்பட்டு வருகிறது மேலும் கும்பக்கரை அறிவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தும் வண்ணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அபாய ஒலி எழுப்பும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் இனிவரும் காலங்களில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு சுற்றுலாப் பயணிகளுக்கு அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒலி எழுப்பும் வகையில் அபாய ஒளி எழுப்பும் கருவியும் அதேபோல கும்பக்கரை அருவியை இரு பக்கமும் கடந்து செல்வதற்காக பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் வனத்துறையினர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி வனச்சரகர் கூறியதாவது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது ஒரு சில நேரங்களில் அதை சரியாக கணிக்க முடியாமல் போவதால் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதில் வனத்துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றோம் எனவே இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் விதத்தில் அறிவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அபாய ஒலியெழுப்பும் கருவியும் அதேபோல அறிவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டால் அருவியை இரண்டு புறமும் கடந்து செல்வதற்காக பாலமும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இனிவரும் காலங்களில் வெள்ளப்பெருக்கே ஏற்பட்டாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது அபாய ஒளி எழுப்பியதும் அறிவிப்பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அறிவிப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் ஒருவேளை வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டால் தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் பாலத்தின் வழியாக அக்கறையில் இருந்து இக்கரைக்கு கடந்து வருவதற்கு ஏதுவாக தற்போது இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது எனவே கும்பக்கரை அருவிக்கு இனிவரும் காலங்களில் வருகின்ற சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது

அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களை மட்டுமே அறிவிப்பகுதிக்கு அனுமதிக்க இருப்பதாகவும் தெரிவித்தார் மீறி அறிவிப்பகுதியில் குளிப்பதற்கு முயல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போது சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
இந்தப் பணிகள் எல்லாம் மேற்கொள்வதற்காக
திண்டுக்கல் மாவட்டவன அலுவலர்டாக்டர் பி.கே, தீலிப்,
இ வ . ப .அவர்களின் அறிவுறுத்தலின் படியும்மற்றும்
திண்டுக்கல் மாவட்டம்உதவி வன பாதுகாவலர்
பெ.சக்திவேல். அவர்களின் வழிகாட்டுதலில் படியும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *