திருக்கோவலூர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவலூரில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது திருக்கோவலூர் கலை அறிவியல் கல்லூரியில் சங்கர காவியம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு திருக்கோவலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார் நகர் மன்ற தலைவர் டி.என்.முருகன், கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர்,சிங்கார உதியன், நகர் மன்ற துணைத் தலைவர் டி.என்.டி.குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்ச்சங்க செயலாளர் பாரதி மணாளன் வரவேற்றார்.

சங்கர காவியம் நூலினை, மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், இந்திய ஆட்சிப் பணி ஆ.சண்முகசுந்தரம் வெளியிட்டு பாராட்டு பட்டயம் வழங்கி சிறப்புரையாற்றினார் கவிஞர் ஆண்டன் பெனி முதல் நூலினை பெற்றுக் கொண்டார்.

முனைவர் தெ.சாந்தகுமார், விதை விருட்சம் அறக்கட்டளைத் தலைவர் அருணகிரி சிதம்பரநாதன், சென்னை முக்கூடல் தமிழ் சங்கத் தலைவர் சிற்றுளி இராம்.கணேஷ், கோவல் தமிழ் சங்கம் ஃபிசா சலீம், கோயம்புத்தூர் க.சுவாமிநாதன் ஆகியோர் நூலினை ஆய்வு செய்தனர்.

வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டி.சுனில் குமார், ரோட்டரி கிளப் செயலாளர் மு. செந்தில்குமார், திருவண்ணாமலை எழுத்தாளர் சண்முகம், அருட்கவிஞர் அருள்நாதன் தங்கராசு, ராணுவ வீரர் கு. கல்யாணகுமார், தலைமை ஆசிரியர் ரவி, நூலகர் சாந்தி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், வேட்டவலம் தமிழ்ச் சங்க செயலாளர் புலவர் தங்க.விஸ்வநாதன், கவிஞர் மித்ராதேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நூலாசிரியர் கவிஞர் கலைச் சித்தன் ஏற்புரையாற்றினார் நகர் மன்ற உறுப்பினர் கோல்டு ரவி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *