விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி
இரும்பை ஊராட்சி இடையன்சாவடி கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வானூர் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வானூர் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளரும் வானூர் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், வானூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஜெகநாதன்,திருவக்கரை தகவல் தொழில்நுட்ப பிரிவு எழில் ராஜா, நிர்வாகிகள்T.முத்துவேல்,E .கணபதி,I.m.s. பிரபாB. பார்த்தசாரதி,
K. ஜெயக்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.