மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமர்சனங்களை பற்றி இம்மிளவும் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என வருந்தும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என உறுதி அளித்திருந்தேன். இதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். 2 ஆண்டுகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தது போல் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *