மதுரை தெற்கு மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.கட்சியினுடைய மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ. கனியமுதன் , மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லா கான், எஸ்.டி.பி.ஐ கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், விமான் இந்தியா மூவ்மெண்ட் மாநிலத் தலைவர் பாத்திமா கனி மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஹார்தீன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.