பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
ஜெயங்கொண்டத்தில் மாவீரன் மஞ்சள் படையின் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் விருப்ப மனு பெறும் கூட்டம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவீரன் மஞ்சள் படையின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் விருப்ப மனு பெறுதல் கூட்டம் அதன் தலைவர் ஜெ குரு கனலரசன் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர் சூரியமணல் குமார் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் புயல் பாபு மற்றும் அமைப்பு தலைவர் சிங்கம் குமார் சிறப்புரை ஆற்றினர்
இதில் புயல் பாபு பேசுகையில் வருகின்ற மே 25ஆம் தேதி வன்னியர் சங்க நிரந்தர தலைவர் காடுவெட்டி குரு அவர்களுக்கு குருபூஜை வெகு விவரசையாக கொண்டாடப்பட வேண்டும் காடுவெட்டிக்கு வரும் வன்னியர்களுக்கு உணவு தண்ணீர் உட்பட சிறப்பாக உபசரித்து அனுப்ப வேண்டும் என்று பேசினார்.
மேலும் மாவட்ட செயலாளர் குமார் கூடுதல் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க தொண்டர்கள் கொடுத்த விருப்ப மனுவை பெற்றுக்கொண்டார் . நிகழ்ச்சியின் முடிவில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் மாறன் அறிவுச்செல்வன் நன்றி உரையாற்றினார்.
இந்த மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை சார்ந்த மாவீரன் மஞ்சள் படை தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.