புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
கவிஞர் மு.ராஜேஷ் வரவேற்றார். புரட்சிக்கவிஞரும் உழைப்பாளரும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாத விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் எழுத்தாளர் கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார். பாபு எழுதிய செங்கழுநீர் என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலினைப் பெற்றுக்கொண்ட கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் நூலாசிரியரை வாழ்த்திப் பேசினார். வேணுகோபால் செங்கழுநீர் நூல் குறித்து ஆய்வு செய்து பேசினார். நூலாசிரியர் பாபு ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து நடந்த கவியரங்கத்தில் 42 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர். முடிவில் கவிஞர் மதன் நன்றி தெரிவித்தார்.