எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (10.5.2023) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நாமக்கல் மாவட்டம் – வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 2 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய பதிய அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆற்றல்மிக்க தலைமையிலான அரசு, இரண்டு ஆண்டு நிறைவு செய்துள்ளதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் திட்டங்களை தொகுத்து “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற‌ தலைப்பிலான சாதனை மலரை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்ஸ்ரேயா பி.சிங், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் அவர்கள் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தங்கம்மாள் (வெண்ணந்தூர்), கே.பி.ஜெகநாதன் (இராசிபுரம்), மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, அட்மா குழு தலைவர் ஆர்.எம்.துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்அசோக்குமார், பிரபாகரன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *