கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வனபாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஆலோசப்படி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநரின் அறிவுரைப்படி அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்றது அதன் படி நாளை 17 ஆம் தேதி யானைகளை நேரடி கணக்கெடுப்பும் 18 ஆம் தேதி நேர்கோட்டு பாதையில் உள்ள யானைகளின் லத்தி என்ற சாணம் கணக்கெடுப்பும் 19 ஆம் தேதியன்று நீர்நிலைகள் பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று தினங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் அதற்கான ஆலோசனைகள் இப்பயிற்சியின் போது வழங்கப்பட்டது