தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் தொகுதி சமக செயலாளர் ரவி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆர்.சரத்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தென்காசி தெற்கு மாவட்டம், கடையநல்லூர் தொகுதி செயலாளர் ரவி மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட உறுப்பினர் பாண்டி ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சமூகவலை தளங்களில் தொடர்ந்து தவறான தகவல்களை பதிவிட்டு வருவதால், தொகுதி செயலாளர் பொறுப்பில் இருந்து ரவியையும், அடிப்படை உறுப்பினரில் இருந்து பாண்டியும் விடுவிக்கப்படுகிறார்கள். மேலும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உழைக்காமல் தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளித்து கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.