பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி பங்குபெற்று சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது அமித் ஷா எச் ராஜா சீமான் எடப்பாடி இவர்களையெல்லாம் எதிர்த்து வெற்றி பெறுவது என்றால் இந்த இயக்கம் அஸ்திவாரத்தோடு முறையாக வளர்ந்து அரசியல் உலகில் நிமிர்ந்து நிற்பதற்கு மு.க.ஸ்டாலின் உழைப்பதாகவும் மேலும் மத்திய அரசு வேலைகளின் தேர்வு தமிழில் எழுதுவதற்கு மு. க. ஸ்டாலின் பிரதமரிடம் 24 மணி நேரத்தில் சட்ட திருத்தத்தை கொண்டு வரவும் அதை மோடி அரசாங்கம் உடனடியாக அமல்படுத்தியதாகவும் தமிழகம் மட்டுமல்லாமல் 13 மாநிலங்களின் முதல் ஒரு பொறுப்பை ஏற்பதற்கு தகுதியானவர் எனவும்
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூர் வழக்கு போட்டதால் தான் கர்நாடக தேர்தலில் மோடி அரசாங்கம் தோற்றதாகும் அவர் கூறினார்.
மேலும் இந்த மாபெரும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.