மதுரை புதுஜெயில் ரோடு பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் டாக்டர் என்று கூறி, தனது வீட்டில் வைத்து பல்வேறு நோய் களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவரது வீட்டில் சோதனை நடந்தது. இதில் அங்கிருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கைப்பற்றப் பட்டன. இது தொடர்பான வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் அங்கீகாரம் பெறாமல் போலி டாக்டராக செயல்பட்டு வந்துள்ளார். மேலும் அவரிடம் இருந்து பல மருத்துவ பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், மனுதாரர் சிறையில் இருந்த நாட்களை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது. அதாவது, இனி இது போன்ற குற்றச்செயல் களில் ஈடுபடமாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனை களுடன் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று நீதிபதி தமிழ்செல்வி உத்தரவிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *