தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை தூர்வார வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இயற்கை முறையில் விவசாயம் செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் பேசினர்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *