சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக இதுவரை பொறுப்பேற்று செயல்பட்டு கொண்டிருந்த வழக்கறிஞர் காத்தவராயன் அவர்கள் தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு புதிய தலைவராக I.அகமது ரியாஸ் அவர்களை
பி.ஆர்.ஓ அட்வகேட் T. G. மனோகர் மற்றும் சர்வதேச செயலாளர் அட்வகேட் V. S. முகமது முபாரக் என்ற சலீம் அவர்கள் பரிந்துரையின் பேரில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் A. சுரேஷ் குமார் அவர்கள் நியமனம் செய்துள்ளார்.
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழகத் தலைவர் I. முகமது ரியாஸ் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.