செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம்
புதுவை பண்ட சோழநல்லூரில் இயங்கி வரும் பெர்ஜர் பெயிண்ட் கம்பெனி நிறுவனம் அவ்வப்போது மக்களுக்கு சிறப்பாக நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது புயல்,மழை,கடும் வெள்ளம், கொரோனா காலகட்டம் போன்ற சமயங்களில் மக்களுக்கு ஆதரவாக துணை நின்று சமூகப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.
அந்த வரிசையில் நேற்று அரசு பள்ளிகளுக்கு சுமார்ட் டிவி மற்றும் ஆர்வோ வாட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி வழங்கியும், சமுதாய நலக்கூட புனரமைப்பு அடிக்கல் நாட்டு விழா முப்பெரும் விழா நடத்தியது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு தலைமையேற்று சிறப்புரையாற்றினார். பெர்ஜர் பெயிண்ட் கம்பெனியின் பொது மேலாளர் அருண் கார்த்திக், மனித வள மேம்பாட்டு அதிகாரி சதீஷ், தொழிலதிபர் தமிழ்மணி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு தலைமையேற்று மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அரியூர் வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் இம் முகாமில் குழுவாக பொதுமக்களை சோதித்து மருத்துவ அறிவுரை வழங்கியதுடன் கண் மருத்துவம் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்து தேவைப்பட்டோருக்கு மருந்து மாத்திரை வழங்கினர்.
பெர்ஜர் பெயிண்ட் கம்பெனியின் பொது மேலாளர் அருண் கார்த்திக் சுமார்ட் டிவி இயக்கி டிஜிட்டல் வகுப்பறையை தொடக்கி வைத்தார். பண்ட சோழநல்லூர் அரசு ஆரம்பப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்வோ குடிநீர் கருவியை தொழிலதிபர் தமிழ்மணி தொடக்கி வைத்தார். இம் முப்பெரும் விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்