அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி புதுச்சேரியில் அன்னதான மற்றும் சூடான பால் வாழங்கும் விழா:
புதுச்சேரி அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நேற்று 8.3.2024 வெள்ளிககிழமை மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் உறுப்பினர்கள், சங்க பொறுப்பாளர்கள், திரலான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாமுன்னிட்டு இரவு 8.30 மணிக்கு புதுவை லாசுப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் லாசுப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானதானம் மற்றும் குரு சித்தானந்த சுவாமிகள் திருக்கோயிலில் சூடான பால் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில தலைவர் திரு.சடாட்சரமூர்த்தி, மாநில செயலாளர் திரு.இராகவேந்திர சிவம் , மாநில மகளிர் அணி தலைவி திருமதி பிரியா சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.