காரைக்காலில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் மற்றும் மதுபானங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பட்டினம் திருமலைராஜன் ஆற்று பாலம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து வந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் சாராயம் மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து காரில் இருந்தவரிடம் போலீசார் நடத்தி விசாரணையில் நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் பகுதி சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் அதிலிருந்த 15 பிளாஸ்டிக் பைகளில் இருந்த 150 லிட்டர் சாராயத்தையும் திருப்பட்டினம் போலீசார் பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *