ஆ.மோகன்ராஜ், காரைக்கால் மாவட்ட செய்தியாளர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம். ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கொடி மரத்து விநாயகர் மற்றும் பந்தக்கால்களுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால்கள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பிரம்மோற்சவ விழா வரும் மே 05ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.
நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.