தென் திருமலை திருப்பதி ஸ்ரீ வாரி ஆனந்த நிலையத்தில் குரோதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. காலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமாலை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதைத்தொடர்ந்து மாலை ஸ்ரீ மலையப்பசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தங்கத்தேரில் எழுந்தருளினார்.
மேள தாளங்கள் முழங்க தேர் நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து பின்னர் நிலை சேர்ந்தது. நிகழ்ச்சியில் அன்னூர் K.கோவிந்தசாமி குடும்பத்தார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.