பாபநாசம் அருகே ராஜகிரியில் அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் முப்பெரும் விழா….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி அன்னை கதீஜா கல்வி மையத்தின் எட்டாம் ஆண்டு விழா இமாம் அபு ஹனிபா பயிற்சி மையத்தின் ஆறாம் ஆண்டுகள் மற்றும் கோடைகால பயிற்சி மையத்தில் 14ஆம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா ராஜகிரியில் காயிதே மில்லத் மண்டபத்தில் ராஜகிரி பெரிய பள்ளி தலைவர் யூசுப் அலி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செயலாளர் முகமது சுல்தான், பெரிய பள்ளி துணை இமாம் பஹ்மி கிரா அத் ஓதி உளவை தொடங்கு வைத்தார் மைய ஆலோசகர் அனீஸ் ,கல்வி மைய முதல்வர் சாகுல் ஹமீது ஆகியோர் வரவேற்று பேசினர்.

மண்டல பொறுப்பாளர்கள் சல்மான் பாஜில் உமர் பாரூக் மூத்த ஆசிரியை ஜீனத் தலைமை ஆசிரியை ஜுவைரியா பானு ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆசிரியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினர்.

விழாவில் மைய தலைவர் மூபா பாரூக்,முத்தவல்லி ரவூப், துணைச் செயலாளர் சபீர் ,வெல்பர் தலைவர் முகமது காசிம் செயலாளர் அன்வர் பெரிய பள்ளிவாசல் உறுப்பினர்கள் ஜமாத்தார்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முல்லா பாரூக் நன்றியுரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *