செங்கம் செய்தியாளர் சக்திவேல்
செங்கம் அருகே குடி தண்னீர் கேட்டு அரசு பேருந்து சிறைபிடிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழையுத்து ஊராட்சியில் உள்ள ஆறாவது வார்டு, பொன்னி தண்டா, மற்றும் இருளர் காலனி பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து செங்கம் – தாழையுத்து சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.