கம்பம் செய்தியாளர் பாஸ்கரன்
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி. தமிழக கேரள எல்லையில் சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.
இதன் தாக்கம் தமிழக பகுதிகளில் பரவாமல் தடுக்கும் விதமாக தமிழக கேரள எல்லைகளான போடி போடி மெட்டு சாலை கம்பம் கம்பம் மெட்டு சாலை கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலை ஆகிய தமிழக கேரள எல்லைகளை இணைக்கும் பகுதிகளான அங்கு தமிழக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெ ழிக்கப்பட்டும் அங்கிருந்து கோழி வாத்து போன்ற பறவைகள் கொண்டுவரப்படுகிறதா என்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு அதிகாரிகள் கூறும்போது கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிரமாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்