பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த +2 மாணவனை ஒரு மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்.

பாலக்கோடு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சுண்டன் மகன் மதன் சக்கரவர்த்தி 17 வயது இவர் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலக்கோட்டுக்குச் சென்று மீண்டும் இரவு 8மணி அளவில் சொந்த கிராமமான மூங்கப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது வீட்டின் அருகே உள்ள இவருக்கு சொந்தமான 60 அடி கிணற்றில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

பிறகு பாலக்கோடு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவனை ஒரு மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு அவரது பெற்றோர் இடத்தில் சேர்த்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *