வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் 2 ஆயிரத்து 600 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக பஸ், ரயில்கள், நான்கு சக்கரம், இருச்சக்கரம் வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மற்றும் கடைகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை போன்று 2 ஆயிரத்து 600 கிலோ பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில், திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆனந்தி, உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை அழித்தனர்.