துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் தீரன் நகர் பகுதியில் “தமிழ்நாடு விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு கட்சி”யின் தலைவர் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை துறையூர் இல் கணேசன் என்பவர் வளர்த்து பராமரித்து வருகிறார்.
அந்த ஆடுகளில் ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குட்டி ஒன்றை ஈன்றது. அப்போது அந்த ஆட்டுக்குட்டிக்கு 6 கால்கள் இருந்தது தெரிய வந்தது. வழக்கமாக ஆட்டுக்குட்டிகள் நான்கு கால்களுடன் பிறப்பது இயற்கை.அதற்கு மாறாக 6 கால்களுடன் இந்த ஆட்டுக்குட்டி பிறந்ததால் இயற்கைக்கு மாறான உடல் உறுப்பு இருப்பதால் இந்த ஆட்டுக்குட்டி உயிருடன் இருக்குமா இல்லையா என ஆட்டை வளர்த்து வந்த கணேசன் நினைத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இரண்டு மாதங்களாக நல்ல நிலையில் இந்த ஆட்டுக்குட்டி வளர்ந்து வந்துள்ளது.மற்ற ஆடுகளைப் போல் சகஜமாக புற்களை மேய்ந்து இந்த ஆட்டுக்குட்டி தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. இதை அடுத்து ஆறு கால்களுடன் பிறந்த இந்த அதிசய ஆட்டுக்குட்டியை துறையூர் சுற்று வட்டார பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்