ஆர். கண்ணன் செய்தியாளர் திருச்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில வாகன ஒப்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜே.சி.ஐ மணவை கிங்ஸ் சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ மணவை கிங்ஸ் தலைவர் ஜெயம்சக்திவேல் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக காவல் துறை டி.எஸ்.பி. ராமநாதன், போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நாவாஸ்தீன் மற்றும் காவலர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு கனரக, இலகுரக வாகனங்கள், ஆட்டோ. இருசக்கர வாகனங்கள் உள்ளிட் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.
மேலும் வாகன ஒட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குதித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
காரில் சீட்டு பெல்ட் அணிந்து வந்தவர்களையும், இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணிந்து வந்தவர்களையும் பாராட்டி திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜே.சி.ஐ.மண்டல இயக்குனர்கள் முல்லைசந்திரசேகர், பிரபு, திட்ட தலைவர் ஜெயபால், திட்ட இயக்குனர் பரமசிவம், செயலாளர் குணசேகரன், சாசன தலைவர் கனேஷ்ராஜா, முன்னாள் தலைவர்கள் ராஜா, சாகுல்அமீத், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஜோசப்ராஜ், கனகராஜ், சிவக்குமார், கண்ணன், ஆனந்த், சிவக்குமார், கந்தசாமி, மற்றும் உறுப்பினர்கள் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர்.